திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. நேற்று 21 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் நேற்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டம் முழுவதும் 290 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.