பெண் தீக்குளித்து தற்கொலை

பெண் தீக்குளித்து தற்கொலை

Update: 2021-07-17 17:26 GMT
காங்கேயம், 
காங்கேயம் அருகே உள்ள கீரனூர், சுல்லிவலசை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி சாந்தாமணி (வயது 48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில்  ஈஸ்வரமூர்த்தியும் அவரது மனைவி சாந்தாமணியும் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில் சாந்தாமணிக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இடது காலில் புண் ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் கடந்த 6 மாதமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சாந்தாமணி நேற்று மதியம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
பின்னர் சாந்தாமணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஈஸ்வரமூர்த்தி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். பின்னர் அருகில் இருந்த உறவினர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மருத்துவமனையில் சாந்தாமணியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்