பணியாளர்கள், டிரைவர்களுக்கு நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

சுற்றுலாத்துறை தொடர்புடைய பணியாளர்கள், டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம், அரியலூர்- ஜெயங்கொண்டத்தில் நாளை நடக்கிறது.

Update: 2021-07-17 19:05 GMT
அரியலூர்,

சுற்றுலாத்துறையினர் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்புடைய உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அரியலூரில் கீதா கிராண்ட் ஓட்டலிலும், ஜெயங்கொண்டத்தில் ஆரோக்கிய மகாலிலும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மேற்கண்ட பணியாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரமணசரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்