புதிதாக 22 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-07-18 18:59 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45,273 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,356 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 44 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 380 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 220 பேரும், சிகிச்சை மையங்களில் 16 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்