13 மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-18 19:06 GMT
விருதுநகர், 
விருதுநகர் கிழக்கு போலீசார் ரோந்து சென்றபோது இந் நகர் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள 116 காலனி அருகே தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 24) என்பவர் 10 மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல விருதுநகர் புறநகர் போலீசார் ரோந்து சென்றபோது கே.கே.எஸ்.எஸ்.என். நகர் அருகே மதுரை மாவட்டம் வில்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (43) என்பவர் 3 மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடமிருந்து 3 மதுபாட்டில்களையும் மது விற்ற ரூ.550-யும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்