செம்மண் கடத்திய 3 பேர் மீது வழக்கு; லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல்

செம்மண் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-19 21:26 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி கிராமத்தில் காணிக்கைபுரம் ரெயில்வே கேட் அருகே காலிமனையில் இருந்து அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக கீழப்பழுவூர் போலீசில், கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் செம்மண் கடத்தலில் ஈடுபட்ட குழந்தைராஜ் என்பவரின் மகன் ரோமான்ல்டு(வயது 20), குழந்தைராஜ் (வயது 42), லூர்துசாமி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்