வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் சாவு

வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் இறந்தார்.

Update: 2021-07-19 21:26 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ்(வயது 55). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விற்பனை ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பெரியம்மாபாளையம் நோக்கி சென்றபோது, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு அருகே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் போலீசார் நடராஜின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நடராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்