மேலும் 16 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-20 15:14 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1½ மாதமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 5 பெண்கள் உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 



இதையடுத்து அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்