மேலும் 16 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1½ மாதமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 5 பெண்கள் உள்பட மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.