மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-ஒருவர் பலி

மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-ஒருவர் பலி

Update: 2021-07-20 17:26 GMT
புதுக்கோட்டை, ஜூலை.21-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தற்போது 402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 பேர் உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்