தீக்காயம் அடைந்தவர் சாவு

விக்கிரமசிங்கபுரம் அருகே தீக்காயம் அடைந்த முதியவர் இறந்தார்.

Update: 2021-07-20 19:51 GMT
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கடந்த 16-ந் தேதியன்று இரவு வீட்டில் உறங்கச் செல்லும்போது விளக்கை எரிய வைத்துவிட்டு தீக்குச்சியை வீசியுள்ளார். இதனால் தீக்குச்சியிலிருந்த தீ அவரது துண்டில் பிடித்து வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் ்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆறுமுகம் இறந்தார். இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்