183 பேருக்கு கொரோனா பாதிப்பு பெண் பலி

183 பேருக்கு கொரோனா பாதிப்பு பெண் பலி

Update: 2021-07-21 16:11 GMT
183 பேருக்கு கொரோனா பாதிப்பு பெண் பலி
கோவை

கோவையில் நேற்று புதிதாக 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. 

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 50 வயது பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 306 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 801 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 525 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்