23 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 7 பெண்கள் உள்பட மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 34 ஆனது. இதற்கிடையே நேற்று 11 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். அதன்மூலம் இதுவரை 31 ஆயிரத்து 178 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.