விவசாயி தீக்குளித்து தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் அருகே உள்ள நூரோலை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் கொளஞ்சி(வயது 47). விவசாயியான இவர் சம்பவத்தன்று தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீ வெப்பம் தாங்க முடியாமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கார்த்திக் கொளஞ்சியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
வயிற்று வலி தாங்க முடியமால் கார்த்திக் கொளஞ்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.