கமுதி,
கமுதி-மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தயிர், திரவியபொடி,மஞ்சள், பன்னீர் உள்பட 12 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் மண்டலமாணிக்கத்தில் உள்ள அருள்பவள நாயகி சமேத கைலாயநாதர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.