நல்லம்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் பலி

நல்லம்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் பலி

Update: 2021-07-21 18:30 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்த வடக்குதெரு கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). இவர் நேற்று குடிப்பட்டி மேம்பாலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முன்பு சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்