பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை அருகே பெண்ணிடம் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர்.
கோவை
கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் தேவிபாலா (37). இவர் நேற்று ரெட்பீல்டு பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென தேவிபாலா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.