பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலி பறிப்பு

திசையன்விளையில் பெண்ணை அரிவாளால் வெட்டி சங்கிலியை வாலிபர் பறித்தார்.

Update: 2021-07-21 20:07 GMT
திசையன்விளை:
திசையன்விளை விஸ்வகர்மா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி ரத்தினம் அம்மாள் (வயது 56). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜ்குமார் (வயது 35). ரத்தினம் அம்மாள் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், ரத்தினம் அம்மாள் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் கையில் வெட்டி விட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டதாக திசையன்விளை போலீசில் ரத்தினம் அம்மாள் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்