சூதாடிய 3 பேர் கைது

நெல்லையில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-21 20:10 GMT
நெல்லை:
நெல்லை வி.எம். சத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக, பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன், இசக்கிமுத்து, பேச்சிமுத்து ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. அவரகள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.31 ஆயிரத்து 860-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்