34 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம்
கடலூர் மாவட்டத்தில் 34 தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளாா்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்களில் தனிப் பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து முன்கூட்டியே அறிந்து, போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். இவர்களில் 34 பேரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டுள்ளார். சில போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக தனிப் பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.