வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்
வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்.
கூடலூர்,
கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒருமடத்தை சேர்ந்த பத்மநாதன் என்பவரது தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியது.
மேலும் தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி பகுதியில் சில விவசாயிகளின் வாழைகளை சேதப்படுத்தியது. இதில் 250-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.