திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 50 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
மாவட்டத்தில் இதுவரை 635 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.