தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-22 19:24 GMT
விருதுநகர், ஜூலை
விருதுநகர் அருகே உள்ள எம்.செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருவாயம்மாள். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவரான இவர் உடல் நலக் குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்குச் சென்றிருந்த போது சதீஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்