பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-07-22 20:07 GMT
கீரனூர்
கிள்ளனூர் அருகே பெரம்பூர் குளத்துகரை பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் (வயது 55), ராமராசு (35), பாலசுப்பிரமணியன் (55), பிரபு (32), வடிவேல் (38) ஆகிய 5 பேரை உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு கைது செய்தார்.  அவர்களிடம் இருந்து ரூ.150 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்