வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மணப்படை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). பழ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.