சிமெண்டு தூண் திருடிய 4 பேர் கைது

உவரியில் சிமெண்டு தூண் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-22 20:12 GMT
திசையன்விளை:
உவரியை சேர்ந்தவர் ஜெயப்பாண்டியன் (வயது 70). இவருக்கு சொந்தமான தோட்டம் காரிக்கோவில் கிராமத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் கம்பிவேலி அமைப்பதற்காக சிமெண்டால் ஆன தூண் வாங்கி வைத்து இருந்தார். அதை மகாதேவன்குளத்தை சேர்ந்த சுடலைக்கண் (37), சாமிதுரை (40), தாழையூத்து சண்முகவேல் (24), வடக்கு விஜயநாராயணம் இசக்கிபாண்டி (42) ஆகியோர் திருடி வாகனத்தில் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஜெயப்பாண்டியன் உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்து சிமெண்டு தூண்களை திருடிய 4 பேரையும் கைது செய்தார். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்