31 பேருக்கு கொரோனா

31 பேருக்கு கொரோனா ஏற்பட்டது

Update: 2021-07-22 20:37 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 864 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 34 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 பேர் உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்