விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

Update: 2021-07-23 14:58 GMT
நயினார்கோவில்
பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் சவுந்தரநாயகி நாகநாதர் சாமி கோவில் ஆடிப்பூர விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பார்த்திபனூர், சத்திரக்குடி, கமுதக்குடி, இளையான்குடி, ராமநாதபுரம் மற்றும் தேவிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நயினார்கோவில் வரை நடந்து சென்று அம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடிமுதல் வெள்ளியை முன்னிட்டு அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் சிறப்பு தீபாராதனையும், கொரோனா நோய் ஒழிய சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்