மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

Update: 2021-07-23 16:25 GMT
பரமக்குடி
பரமக்குடி சர்வீஸ் சாலையில் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை எமனேசுவரம் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் லாரியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மணல் அள்ளிய சத்திரக்குடியை சேர்ந்த பிரகாஷ்குமார்(வயது 37), சென்னை வேளச்சேரியை சேர்ந்த முருகவேல்(48) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எமனேசுவரம் கிராம நிர்வாக அதிகாரி கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்