சூதாடிய 5 பேர் கைது

விருதுநகரில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-23 19:19 GMT
விருதுநகர், 
விருதுநகர் கலைஞர் நகர் பகுதியில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மேட்டுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (வயது 52), விஜயன் (40), கணேசன் (52), முரளி (39), மூக்காண்டி (56) ஆகிய 5 பேரும் காசுவைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்ததுடன் அவர்களிடமிருந்த ரூ. 350-ஐ பறிமுதல் செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்