லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
குளித்தலை போலீசார் சுங்ககேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற குளித்தலை மீன்காரத்தெருவைச் சேர்ந்த முகமதுரபி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.100-யை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.