தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

காரைக்குடியில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-24 19:24 GMT
காரைக்குடி,

காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 30). இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உண்டு. ஆறுமுகம் கேரளாவில் வல்லித்துறை என்ற இடத்தில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.சமீபத்தில் காரைக்குடி திரும்பினார். சம்பவத்தன்று ஆறுமுகத்திற்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகத்தின் அக்காள் ஷோபனாவையும் அவரது குழந்தையையும் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். சில மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது ஆறுமுகம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்