பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-07-24 19:52 GMT
நெல்லை:
பாரதீய ஜனதா கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் முத்துக்குமார், தமிழ்ச்செல்வன், தச்சநல்லூர் தெற்கு மண்டல தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சுரேஷ், பால்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்டோரை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஊடகப்பிரிவு தலைவர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்