மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கடையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.

Update: 2021-07-24 20:10 GMT
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் தங்கதுரை (வயது 55). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தங்கதுரை குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டம் இந்திரா காலனியில் உள்ளது. இங்கு சிறுகிழங்கு மற்றும் வெங்காயம் பயிர் செய்துள்ளார். நேற்று அதிகாலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தங்கதுரை மின்மோட்டாரை இயக்க வந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடையம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்