கார் மோதி தொழிலாளி பலி

ராமநாதபுரம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2021-07-25 16:32 GMT
ராமநாதபுரம், 
 பரமக்குடி வேந்தோணிரோடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது34).தச்சு தொழிலாளியான இவர் தனது மனைவி அபிநயா (27) மற்றும் மகன் ராஜேந்திர பாலாஜி (7) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.ராமநாதபுரம் அருகே உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகே வந்தபோது சிவகங்கை நோக்கி சென்ற கார் மோதியது.இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகவே மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்வேல் பரிதாபமாக உயிரிழந்தார்..தாய், மகன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சிவகங்கையை சேர்ந்த பழனி என்பவரின் மகன் முகிலன் (27) என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்