அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- முதன்மை செயலாளர் உத்தரவு
கொந்தகையில் அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
திருப்புவனம்,
கொந்தகையில் அருங்காட்சியக கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதன்மை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டு உள்ளார்.
ஆய்வு
இந்த அருங்காட்சியக பணிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முதன்மை செயலாளர் கூறியதாவது:-
விரைந்து முடிக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கீழடியில் நடைபெற்று வரும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை அவர் ஆய்வு செய்தார். அங்கு கிடைத்த அரிய வகை பொருட்களையும் பார்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது தொல்லியல் துறை மாநில துணை இயக்குனர் சிவானந்தம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.