ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Update: 2021-07-26 13:59 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே சின்னவரிகம் கிராமத்தை சேர்ந்தவர் கவி ரஞ்ஜினி (வயது 21). இவர் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று கவிரஞ்ஜினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்