மளிகை கடை பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது

மளிகை கடை பூட்டை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது

Update: 2021-07-26 14:54 GMT
கருமத்தம்பட்டி, ஜூலை.27- கருமத்தம்பட்டி- சோமனூர் சாலையில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருபவர் ராஜஸ்தான் மாநிலத்த
கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி- சோமனூர் சாலையில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபாராம் (வயது35).  சம்பவத்தன்று இரவு 2 வாலிபர்கள் இந்த கடையின் பூட்டை உடைத்து திருடமுயன்றனர்.  


அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட கருமத்தம்பட்டி போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.  அப்போது அவர்கள், கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது34), பர்வதன் (31) என்பது என்பதும், அந்த கடையில் திருட முயன்றதும் தெரியவந்தது. 
இதனை தொடர்ந்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்