தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை நேருநகரை சேர்ந்தவர் ராஜா (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (30). ராஜா அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.