குத்தாலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

குத்தாலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-07-26 16:27 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆதம்நகரில் வசித்து வந்தவர் கணபதி (வயது 38). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்துள்ளார். அவர், தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் ஒரு ‌வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினமும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வீட்டின் ஒரு அறையில் கணபதி தூங்க சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மற்றொரு அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். இதையடுத்து குமாரி, கணவரை அவர் தூங்கிய அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்கிட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து குமாரி கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்