விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-26 16:53 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக செல்வத்தின் மனைவி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த செல்வம் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்