கல்வராயன்மலையில் 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2021-07-26 17:15 GMT

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு  துணை‌ போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது கிணத்தூர் கிழக்கு ஓடையில் மர்மநபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக 90 மூட்டையில் 2,700 கிலோ வெல்லம், 12 பேரல்களில் 2,400 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து வெல்லத்தை பறிமுதல் செய்த போலீசார் சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் மற்றும் வெல்லத்தை பதுக்கி வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்