விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-26 17:35 GMT
சிவகங்கை
கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்று கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கட்டிய அணையை அப்புறப்படுத்த வேண்டும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கோபால், சங்கையா, லட்சுமணன், மருது சகாயம், முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்