புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

Update: 2021-07-26 17:43 GMT
இளையான்குடி
இளையான்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக நஜிமுதீன் என்ற பசீர் (வயது 40) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல சாத்தணி கிராமத்தில் குமார்(46) என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து 39 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்