குடியாத்தத்தில் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

Update: 2021-07-26 17:50 GMT
குடியாத்தம்

குடியாத்தம் பிச்சனூர் அச்சுதானந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கோதண்டன் (வயது 35). நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி பொன்னி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் பொன்னி இறந்துவிட்டார்.

மனைவி இறந்தது முதல் துக்கத்தில் இருந்த கோதண்டன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனையிலும் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கோதண்டன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி பொன்னி இறந்த ஏக்கத்தில் கணவன் கோதண்டன் தற்கொலை செய்து கொண்டதால் இரண்டு குழந்தைகளும் பெற்றோர்கள் இல்லாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது

மேலும் செய்திகள்