கொரோனா தடுப்பூசி முகாம்

ஆலங்குளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-07-26 18:49 GMT
ஆலங்குளம்,
ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் சரஸ்வதி, லட்சுமி, கீர்த்திகா ஆகியோர் அடங்கிய சுகாதாரகுழுவினர் 244 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
இதேபோல் மேல பழையாபுரத்தில் 128 பேருக்கும், கண்மாய் பட்டியில் 52 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஏ.லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் மகேஷ்வரி மகேஷ்வரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்