டிரைவருக்கு அரிவாள் வெட்டு

திருக்குறுங்குடி அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2021-07-26 19:07 GMT
ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள வடுகச்சிமதில் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் லட்சுமணபாண்டி (வயது 24). இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது பெரியம்மா லட்சுமி அதே தெருவில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று லட்சுமணபாண்டி அவரது பெரியம்மா லட்சுமியை பார்க்க சென்றார். ஆனால் லட்சுமியை வீட்டில் காணவில்லை. இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமியை தேடினார். வடுகச்சிமதில் டீ கடை அருகே சென்றபோது லட்சுமியின் மகன் வசந்தகுமாரை கண்ட அவர் லட்சுமி குறித்து வசந்தகுமாரிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வசந்தகுமார் ஆத்திரம் அடைந்து லட்சுமணபாண்டியை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த லட்சுமணபாண்டி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்