லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-26 19:12 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கேணிக்கரை விலக்கு ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் இருந்தது தெரிந்தது. அதனையும், லாட்டரி விற்று வைத்திருந்த ரொக்கம் ரூ.5 ஆயிரத்து 360 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக சிவன்கோவில் தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் பத்மநாபன் (வயது47) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்