மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
சிவகிரி அம்பேத்கர் மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகள் சண்முகபிரியா (வயது 17). பிளஸ்-1 மாணவி. இவர் தன்னுடன் பயின்ற மாணவனிடம் பேசியதை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகபிரியா நேற்று மதியம் வீட்டில் யாரும் இ்ல்லாத நேரத்தில் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.