மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

Update: 2021-07-26 20:14 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கொள்ளிடக்கரையில் இருந்து மணல் கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக டிரைவர் ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணிவேலின் மகன் ராஜேசை(வயது 32) கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்