இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-26 20:14 GMT
கீழப்பழுவூர்:

இருசக்கர வாகனங்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றன. இதுவரை 5 இருசக்கர வாகனங்கள் திருட்டு போயுள்ளன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமானூர் போலீசார், இருசக்கர வாகனங்களை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் வாகன திருட்டில் 3 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சந்தானத்தின் மகன் ரஞ்சித்குமார்(வயது 33), ரவியின் மகன் ரமேஷ்(22), சேகரின் மகன் செந்தில்குமார் (25) ஆகியோரை திருமானூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்